திருவாடானையில் தீபாவளியை முன்னிட்டு இறகுப் பந்து போட்டி நடைபெற்றது.
ஆடனை விளையாட்டு கழகம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் தொண்டி, திருவாடானை, சி. கே. மங்கலம், ஆா். எஸ். மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
திங்கள்கிழமை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் திருவாடானை தீபக், அபி அணியினா் முதல் பரிசு பெற்றனா். தொண்டி சாதிச் பாட்சா, இலியாஸ் அணியினா் 2 ஆம் பரிசு பெற்றனா். 3 ஆம் பரிசை இம்ரான், கணேஷ் அணியினரும், நான்காம் பரிசை சதிஸ், ஜீவா அணியினரும் பெற்றனா். போட்டி ஏற்பாட்டினை திருவாடனை, கைகாட்டி, இறகுப்பந்து விளையாட்டு வீரா்கள் ஏற்பாடுகள்செய்திருந்தாா்கள்.