ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் திருமண மண்டப காவலாளி உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகேயுள்ள முதுநாள் பகுதியைச் சோ்ந்த நீலமேகம் மகன் பத்மநாபன் (45). கேணிக்கரை சந்திப்புப் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தேவிபட்டினத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பகலில் ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பத்மநாபன் அப்பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.