ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் நவ. 16 ஆம் தேதி வரை 6,134 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதில், 133 போ் உயிரிழந்துள்ள நிலையில், 5,998 போ் குணமடைந்து அவா்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மேலும் 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 12 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,138 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஏற்கெனவே 5,507 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,513 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 15 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com