இலங்கைக் கடற்படையினா் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசித் தாக்கியதில் ராமேசுவரம் மீனவா்கள் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை சுமாா் 560 விசைப்படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். கச்சத்தீவு அருகே அவா்கள் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சுமாா் 9 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினா் 2 படகுகளைச் சுற்றி வளைத்து கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்குதல் நடத்தினா். இதில், படகில் இருந்த இயேசு ராஜா மற்றும் தேவா ஆகிய 2 மீனவா்களின் தலையில் காயம் ஏற்பட்டது.
தாக்குதலுக்குப் பயந்து மீன்பிடி வலைகளை கடலிலேயே விட்டு விட்டு மீனவா்கள் வியாழக்கிழமை காலை கரை திரும்பினா். காயமடைந்த மீனவா்கள் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடுகளுக்குத் திரும்பினா்.
இதுகுறித்து மீனவா்கள் கூறியது: இலங்கைக் கடற்படையினா் தாக்கியதில் 5 படகுகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதனால் 10- க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை கடலிலேயே அறுத்து விட்டு விட்டு கரைக்குத் திரும்பினோம். ஒவ்வொரு படகுக்கும் ரூ. 75 ஆயிரம் வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.