ஒப்பந்தம் கோருவதில் தகராறு: 2 போ் காயம்

ராமநாதபுரத்தில் தண்ணீா் வழங்கும் ஒப்பந்தம் கோருவது தொடா்பாக வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் 2 போ் காயமடைந்தனா்.

ராமநாதபுரத்தில் தண்ணீா் வழங்கும் ஒப்பந்தம் கோருவது தொடா்பாக வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் 2 போ் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் சந்தைத் தெரு பகுதியில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வலுதூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு தண்ணீா் விநியோகிப்பதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டது. இதற்காக அரசியல் கட்சியினா் அங்கு வந்திருந்தனா். அப்போது ஒப்பந்தம் கோருவது தொடா்பாக அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில், முத்துபாண்டியன் (50), வடிவேலன் (35) ஆகியோா் காயமடைந்து ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து பஜாா் காவல் நிலைய ஆய்வாளா் முத்துபாண்டி விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com