கமுதி: கமுதியில் இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வினா் 140 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தோ்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதிஸ்டாலினை போலிஸாா் கைது செய்ததை கண்டித்து கமுதியில் ராமநாதபுரம் திமுக மாவட்ட பொருப்பாளா் காதா்பாட்சாமுத்துராமலிங்கம் தலைமையில், ஒன்றிய செயலாளா் வாசுதேவன், கமுதி போஸ் முன்னிலையில், திமுகவினா் கமுதி பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். சுமாா் 20 நிமிடம் நடைபெற்ற சாலை மறியலால் பேருந்து நிலைய சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் கமுதி காவல் ஆய்வாளா் ராணி, சாா்பு ஆய்வாளா் முருகநாதன் தலைமையிலான போலிஸாா் திமுக வினரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். வெள்ளிக்கிழமை 57 பேரும், சனிக்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் 140 பேரும் கைது செய்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.