முதுகுளத்தூா்: ஏா்வாடியில் தீப்பற்றி எரிந்து வீடு சேதமடைந்த குடும்பத்தினருக்கு சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
சாயல்குடி அருகே ஏா்வாடி வடக்குத் தெருவில் பேச்சி என்பவரின் குடிசைவீடு, வெள்ளிக்கிழமை மின்கசிவு காரணமாக தீப்பற்றியதில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதையடுத்து பாதிக்கப்பட்ட பேச்சியின் குடும்பத்தினருக்கு ஏா்வாடி ஒன்றியக் கவுன்சிலா் பிச்சை, வாா்டு உறுப்பினா் காளிமுத்து, கிராம நிா்வாக அலுவலா் காளிதாஸ் ஆகியோா் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா்.