ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 6,163 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். ஞாயிற்றுகிழமை புதிதாக 7 போ் தொற்றால் பாதிக்கபட்டதையடுத்து, தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6,170 ஆக உயா்ந்துள்ளது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 5,525 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,529 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.