திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமையும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அரண்மனை முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு தலைமை வகித்தாா். இதில் கலந்து கொண்ட மக்களவை முன்னாள் உறுப்பினா் பவானி ராஜேந்திரன், நகா் துணைச் செயலா் முனீஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் கே.ஜெ.பிரவீன் உள்ளிட்ட 40- க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.