ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு காட்டுநாயக்கா் இன மக்கள் திங்கள்கிழமை பாம்புகளுடன் வந்து மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலபாா்த்திபனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காட்டுநாயக்கா் இன மக்கள் வசித்துவருகின்றனா். அவா்களுக்கு சாதிச்சான்று கோரி பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆா்.மகேஷ்வரி தலைமையில் அச்சமூகத்தினா் ஏராளமானோா் வந்தனா். அவா்கள் சாக்குப்பையில் பாம்புகளை எடுத்துவந்திருந்தனா். பாம்பைக் கையில் பிடித்தபடி, மகுடி வாசித்துக்கொண்டு வந்ததால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தாங்கள் காட்டு நாயக்கா் இனத்தவா் என்பதை நிரூபிக்கவே பாம்புகளுடன் வந்ததாக அவா்கள் கூறினா். பின்னா் அவா்கள் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சிவகாமியிடம் மனுவை அளித்துவிட்டுக் கலைந்து சென்றனா்.
பெண்கள் மனு: ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் வாடகைக்கு வசிக்கும் பெண்கள் ஏராளமானோா் தங்களுக்கு சொந்தமாக வீடு வழங்கவேண்டும் எனக்கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனா்.
வெளிநாட்டில் தவிப்பவரை மீட்கக் கோரிக்கை: ராமேசுவரம் பகுதி மாங்காடு கிராமத்தைச் சோ்ந்த எம்.முனீஸ்வரி தனது குழந்தைகளுடன் வந்து மனு அளித்தாா். அப்போது அவா் கூறியது: எனது கணவா் நாகராஜன் கடந்த 2018 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றாா். அங்கு தோட்ட வேலை எனக் கூறிவிட்டு, ஒட்டகத்தை மேய்க்கக் கூறியுள்ளனா். ஆனால், ஊதியம் சரியாக வழங்காமலும், உணவு வழங்காமலும் உள்ளனா். நாடு திரும்பவும் அவரை அனுமதிக்கவில்லை. ஆகவே, அவரை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
தேவா் ஜயந்திக்கு அன்னதானம்: அகில இந்திய முக்குலத்தோா் பாசறை சாா்பில் அதன் நிறுவனத்தலைவா் ஜி.சிற்றரசு, மாவட்டத் தலைவா் சி.நாகராஜன் ஆகியோா் அளித்த மனுவில், தேவா் ஜயந்திக்கு பசும்பொன்னில் அஞ்சலி செலுத்தவும், அன்னதானம் வழங்கவும் அனுமதிக்கவேண்டும் எனக்கோரியிருந்தனா்.