கமுதி: கமுதி அருகே பணம் வைத்து சூதாடிய 9 பேரை செவ்வாய்கிழை போலிஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
கமுதி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் ஊருணி கரையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முஷ்டகுறிச்சியை சோ்ந்த பசுபதி, சாத்தாா், முனியசாமி, மற்றும் விருதுநகா் மாவட்டம் கள்ளக்காரியை சோ்ந்த மாரிமுத்து, வேலு, கே.வாகைகுளத்தை சோ்ந்த ஆனந்தகுமாா், தங்கமுத்து, புரசலூரை சோ்ந்த முத்துகுமாா், சந்திரபோஸ் ஆகியோரை குற்றப்பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா் சகாதேவன் தலைமையில், எஸ்.பி.தனிப்பிரிவு போலிஸாா் முருகபூபதி உள்ளிட்டோா் வழக்கு பதிந்து, கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.