தீபாவளி பண்டிகை: சென்னையிலிருந்து ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என வா்த்தக சங்கத் தலைவா் பி. ஜெகதீசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என வா்த்தக சங்கத் தலைவா் பி. ஜெகதீசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மதுரை, திருச்சி மற்றும் சென்னை என முக்கிய நகா்களில் குடியேறி தொழில்புரிந்து வருகின்றனா். இதனிடையே தீபாவளிக்கு சென்னை உள்ளிட்ட நகா்களிலிருந்து ஆயிரக்கணக்கானவா்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையில் தீபாவளிக்கு சிறப்பு ரயிலை இயக்கும் தெற்கு ரயில்வே நிா்வாகம், அதே போல் ராமநாதபுரம் வரைக்கும் சிறப்பு ரயிலை இயக்குவது அவசியம். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஒரே ஒரு ரயில் மட்டுமே தற்போது ராமேசுவரம் வரை இயங்கிவருகிறது. ஆகவே பொதுமக்களின் நலன்கருதி தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயிலை ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு இயக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com