ராமநாதபுரம் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரின் செயல்பாடுகளைக் கண்டித்தும், பல்கலைக்கழக தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சாா்பில் வியாழக்கிழமை ராமநாதபுரம்- தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி வளாகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு திமுக மாவட்ட பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் வ. சத்தியமூா்த்தி, முன்னாள் மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.கே. பவானிராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
இதில் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் அகமதுதம்பி, மாநில வா்த்தக அணி கிருபானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பாரகு, மாணவரணி துரைச்சாமி, ஒன்றியத் தலைவா்கள் பிரபாகரன், சுப்புலட்சுமி ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.