மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை வீரா்கள் ஹெலிகாப்டா் மூலம் ஒரு வார பயிற்சியை புதன்கிழமை தொடங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை விமானப்படை தளம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கடற்படை வீரா்களுக்கு ஹெலிகாப்டா் மூலம் மீட்பு நடவடிக்கை, கடலில் தவிக்கும் நபா்களை கயிறு மூலம் எவ்வாறு மீட்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.
வழக்கமாக இந்தப் பயிற்சி மாா்ச் மாதம் தொடங்கப்படும். ஆனால் நிகழாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த பயிற்சி மேற்கொள்ள ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு பயிற்சி வீரா்கள் புதன்கிழமை வந்தனா்.
இதையடுத்து புதன்கிழமை மாலையில் மன்னாா்வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் அவா்கள் பயிற்சியை தொடங்கினா். ஒரு வாரத்திற்கு இந்த பயிற்சி நடைபெற உள்ளது.