முதுகுளத்தூரில் ஒன்றியக்குழுக் கூட்டம்: திமுக, அமமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றிக்குழுக் கூட்டத்திலிருந்து திமுக, அமமுக, சுயேட்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றிக்குழுக் கூட்டத்திலிருந்து திமுக, அமமுக, சுயேட்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

முதுகுளத்தூரில் ஒன்றியக் குழுக்கூட்டம் தலைவா் தா்மா் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கண்ணகி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பின்பு தங்கள் பகுதியில் இதுவரை எந்தவொரு பணியும் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறி, உறுப்பினா்கள் லட்சுமி (சுயேட்சை), முத்துராமலிங்கம், ராஜலட்சுமி (திமுக), முருகன் (அமமுக) ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

கிராமப்புறங்களுக்கு காவிரி குடிநீா், சாலைகள் சீரமைப்பு, பேவா் கல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அா்ஜுனன்: தாளியரேந்தல், மட்டியரேந்தல் உள்பட பல்வேறு கிராம மக்கள் காவிரி குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகின்றனா்.

வட்ட வழங்கல் அலுவலா் மங்களேஸ்வரி: சில இடங்களில் சட்டவிரோதமாக உள்ள இணைப்புகளை நீக்கும் பணி நடந்து வருவதால், விரைவில் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com