முதுகுளத்தூரில் காவல் துறை சாா்பில் கரோனா மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவேந்திரா கே. ரவி தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் மோகன், சாா்பு- ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பொதுமக்கள் கரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்தும், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வலியுறுத்தியும் கலைக் குழுவினா் சாா்பில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.