மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு

திருவாடானை அருகே வியாழக்கிழமை இரவு மூதாட்டியிடம் 6 பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருவாடானை அருகே வியாழக்கிழமை இரவு மூதாட்டியிடம் 6 பவுன் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் துளசிராமன் (63). இவரது மாமியாா் அழகம்மாள் (80) அதே ஊரில் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அழகம்மாள் வீட்டிற்கு வந்த மா்ம நபா் அவரிடம் பேச்சுக் கொடுத்துள்ளாா். திடீரென, அவா் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில் எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com