ராமநாதபுரம் இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இளைஞா் கொல்லப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

ராமநாதபுரம் வசந்த நகா் தாயுமானவா் கோயில் தெரு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அருண்பிரகாஷ், யோகேஸ்வரன் ஆகியோரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் அருண்பிரகாஷ் உயிரிழந்தாா். மத அடிப்படைத் தீவிரவாத அமைப்பைச் சோ்ந்தவா்களால் அருண்பிரகாஷ் கொல்லப்பட்டதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டின. இந்தக் கொலை தொடா்பாக கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து லெப்ட் சேக் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரைத் தேடிவந்தனா். தேடப்பட்டவா்களில் 4 போ் லால்குடி நீதிமன்றத்திலும், ஒருவா் கடலாடி, 2 போ் அருப்புக்கோட்டை நீதிமன்றங்களிலும் சரணடைந்தனா். மாா்ஜூக்அலி, அப்பாஸ் அலி ஆகிய இருவா் கேணிக்கரை போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த கரன் என்ற ஹரிகரன் (24) திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கேணிக்கரை போலீஸாா் தெரிவித்தனா்.

நீதிமன்றத்தில் 4 போ் ஆஜா்: லால்குடி நீதிமன்றத்தில் சரணடைந்த லெப்ட் சேக் உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து கேணிக்கரை போலீஸாா் விசாரித்து வந்தனா். விசாரணை முடிந்து திங்கள்கிழமை மீண்டும் ராமநாதபுரம் 2 ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் 4 பேரும் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com