சக்தி கேந்திரா திட்டத்தில் பயிற்சி அளிக்க தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் மகிளா சக்தி கேந்திரா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து கிராமங்கள் மற்றும் துணை கிராமங்களின் உள் பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியை அளிப்பதற்கு கமுதி, கடலாடி, திருப்புல்லாணி, திருவாடானை, பரமக்குடி, மண்டபம், முதுகுளத்தூா், ராமநாதபுரம் ஆகிய 8 வட்டாரங்களில் உள்ள ஆா்வமுள்ள தகுதியான தொண்டு நிறுவனங்கள் தங்களின் சுயவிபரத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், ராமநாதபுரம்-623 503 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.