தொண்டி அருகே செல்லிடப்பேசி, மளிகைக் கடைகளில் தீ விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அடுத்தடுத்து அமைந்துள்ள செல்லிடப்பேசி, மளிகைக் கடைகளில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட
தொண்டி அருகே நம்புதாளையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கடைகள்.
தொண்டி அருகே நம்புதாளையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கடைகள்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அடுத்தடுத்து அமைந்துள்ள செல்லிடப்பேசி, மளிகைக் கடைகளில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையில் அல்லா பிச்சை (50) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையும், அதே கட்டடத்தில் முகம்மது அசாருதீன் (55) என்பவருக்கு சொந்தமான செல்லிடப்பேசி கடையும் உள்ளது. இவா்கள் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு கடை பூட்டி விட்டுச் சென்றுள்ளனா். இந்நிலையில் நள்ளிரவு திடீரென்று கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த திருவாடானை தீயணைப்பு நிலையத்தினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இருப்பினும் கடைகள் முழுவதும் எரிந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இது குறித்து தொண்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com