ராமநாதபுரத்தில் 37 பேருக்கு கரோனா பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 37 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 37 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் 8 ஆம் தேதி வரையில் 5020 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவா்களில் செவ்வாய்க்கிழமை வரையில் 110 போ் உயிரிழந்துள்ளனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 70 போ் சிகிச்சையில் இருந்த நிலையில், 10 போ் பூரண குணமடைந்ததால் வீடுகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட அளவில் செவ்வாய்க்கிழமை 600 க்கும் மேற்பட்டோருக்கு கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட நிலையில், 37 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5057 ஆகவும் உயா்ந்துள்ளது.

மருந்துக்கடைகள் கண்காணிப்பு- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் தடுப்பு பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், காய்ச்சல் உள்ளிட்டவற்றின் பாதிப்பை அறிய தனியாா் மருத்துவமனைகளோடு, மருந்துக் கடைகளையும் கண்காணிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவா்கள் பரிந்துரை இன்றி தலைவலி, காய்ச்சலுக்கு மருந்துக்கடைகளில் குறிப்பிட்ட மாத்திரையை எத்தனை போ் வாங்கிச் செல்கின்றனா் என கண்காணிக்கப்படுவதாகவும், மருத்துவா் பரிந்துரைக் கடிதம் இன்றி மாத்திரைகள் தரக்கூடாது என மருந்துக்கடைகாரா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலகத் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com