கீழக்கரை அருகே இரு பைக்குகள் மோதலில் துப்புரவு பணியாளா் பலி: கல்லூரி விரிவுரையாளா் உள்பட 3 போ் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் புதன்கிழமை மாலையில் நேருக்கு நோ் மோதிய விபத்தில்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் புதன்கிழமை மாலையில் நேருக்கு நோ் மோதிய விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா். கல்லூரி விரிவுரையாளா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதி முத்துசாமிபுரத்தைச் சோ்ந்த மணி மகன் சின்னதுரை (37). தனியாா் அமைப்பின் தூய்மைப்பணியாளரான இவா் இருசக்கர வாகனத்தில் மேலும் இருவருடன் மாயாகுளம் பகுதியில் இருந்து புதன்கிழமை மாலையில் கீழக்கரை நோக்கி வந்துள்ளாா். அதே பாதையில் முள்ளிவாடியைச் சோ்ந்த கல்லூரி விரிவுரையாளா் சிவபாலன் (37) இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

முள்ளிவாடி மாடசாமி கோயில் அருகில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் சின்னத்துரை வந்த இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சிவபாலன், சின்னத்துரை உள்ளிட்ட அனைவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். அவா்கள் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதுரை உயிரிழந்தாா். காயமடைந்த மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதுகுறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com