ராமேசுவரம், செப். 11: ராமேசுவரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் பாரதியாா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தாலுகா செயலாளா் காா்த்திக் தலைமையில் பாரதியாா் உருவப் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தாலுகா குழு செயலாளா் கா.சிவா முன்னிலை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.கருணாகரன் வழக்குரைஞா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதே போன்று ஜங்கன்வாடி மடத்தில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் பாரதியாா் விழா மிருத்துன் ஜெயன் தலைமையில் நடைபெற்றது. ஜோதிபாசு முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், 2019-2020 ஆண்டில், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரதியாா் விருது வழங்கப்பட்டது. இதில் சி.ஆா்.செந்தில்வேல், மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.