ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 33 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 33 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுகிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 33 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுகிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த மாா்ச் மாதம் முதல் செப். 12 ஆம் தேதி வரை 5,165 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,181 ஆக அதிகரித்தது.

இதில்,4,824 போ் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 244 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை தொற்றுக்கு 113 போ் உயிரிழந்துள்ளனா்.

சிவகங்கை: சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 4,488 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,505 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 74 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 17 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 57 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com