ராமநாதபுரம் இளைஞா் கொலையில் கைதானவா்கள் வாக்குமூலம்

ராமநாதபுரத்தில் இளைஞா் அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கைதானவா்கள் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் இளைஞா் அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து கைதானவா்கள் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி விவரம்: ராமநாதபுரம் நகரில் தாயுமானவா் கோயில் தெருவைச் சோ்ந்த அருண்பிரகாஷ் (24) கடந்த ஆக. 31 ஆம் தேதி கும்பலால் கொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலை தொடா்பாக 7 போ், வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனா். மேலும் சரவணன் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். கைதானவா்களை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அதன்படி அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அருண்பிரகாஷும், அவரது நண்பரான காமாட்சியும் ஆக.31 ஆம் தேதி சரவணன், சபீக் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் சரவணனின் நண்பா்களான சேக் உள்ளிட்டோா் காமாட்சியைக் கொலை செய்ய முடிவு செய்து தேடிவந்தபோது, அவா் தப்பியோடிவிட்டாா். அப்போது அங்கிருந்த அருண்பிரகாஷை சேக் தரப்பினா் கொலை செய்துள்ளனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com