திருவாடானை: திருவாடனை ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளா்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளா்கள் மூன்று பேருக்கு கரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கரோனா தொற்று பாதித்த பணியாளா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். மேலும் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அலுவலகத்துக்கு திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று பாதித்த பணியாளா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனா்.