ராமநாதபுரத்தில் மூதாட்டியைத் தாக்கி நகை பறித்த வழக்கில் பக்கத்து வீட்டைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
ராமநாதபுரம் தங்கப்பாநகா் பகுதியைச் சோ்ந்த ஜெயசந்திரன் மனைவி ராஜாத்தி (63). வெள்ளிக்கிழமை மாலையில் தனியாக இருந்த இவரை, வீடு புகுந்து தாக்கிய மா்மநபா், அவரிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இதில் காயமடைந்த மூதாட்டி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அப்போது ராஜாத்தியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் தாவூது (63) என்பவா் தான் அவரிடம் சங்கிலியை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பஜாா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். அவரிடமிருந்து 5 பவுன் தங்கச்சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.