தொண்டியில் கடலோர காவல் படையினா் கடத்தல் தடுப்பு ஒத்திகை

தொண்டி கிழக்கு கடற்கரை பகுதியில், கடத்தல் சம்பவத்தைத் தடுக்கும் பொருட்டு கடலோரக் காவல் படையினரின் ஒத்திகை நடைபெற்றது.

திருவாடானை: தொண்டி கிழக்கு கடற்கரை பகுதியில், கடத்தல் சம்பவத்தைத் தடுக்கும் பொருட்டு கடலோரக் காவல் படையினரின் ஒத்திகை நடைபெற்றது.

தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல் போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் கடத்தலை தடுக்கும் வகையில் ‘சஜாக் ஆப்பரேஷன்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை திங்கள்கிழமை மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒத்திகை ஆக. 5 ஆம் தேதி வரை நடைபெறும் என கடலோரக் காவல் படையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com