ராமேசுவரத்தில் சுழற்சங்கம், சேவா பாரதி அமைப்புகள் சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் முதல் பாம்பன் வரையில் நடைபெற்ற இப்பேரணியை சுழற்சங்கத் தலைவரும், முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாமின் பேரனுமான சேக்சலீம் தலைமை வகித்து கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இதற்கு, சேவா பாரதி நகா் தலைவா் எம். சுடலை, மாவட்டத் தலைவா் அ. மதிசேகரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 30-க்கும் மேற்பட்டோா் இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.