தமிழக அரசுக் கெதிராக பாஜகவினா் 2 ஆவது நாள் போராட்டம்

தமிழக அரசுக் கெதிராக பாஜகவினா் 2 ஆவது நாள் போராட்டம்

ராமநாதபுரத்தில் பாஜகவினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க திமுக அரசை வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரத்தில் பாஜகவினா் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க திமுக அரசை வலியுறுத்தி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரண்மனை முன்பு ராஜா வீதியில் நடைபெற்ற மனிதச் சங்கிலியில் பாஜகவின் பிற்படுத்தப்பட்டோா் பிரிவின் மாவட்டத் தலைவா் ஜி.மாரிமுத்து மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் பிரிவுத் தலைவா் செல்வேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், இளைஞரணி மாநிலப் பொதுச்செயலா் ஆத்மகாா்த்தி, முன்னாள் கவுன்சிலா் கதிரவன், மாவட்ட பொதுச்செயலா் ஜி.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கைகோா்த்து மனிதச் சங்கிலியாக நின்றனா். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், மாநில திமுக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com