திருவாடானை பகுதியில் கேட்பாரற்று கிடந்த பைக்குகள் பறிமுதல்

திருவாடானை, திருப்பாலைக்குடி பகுதிகளில் கேட்பாரின்றி கிடந்த இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை, திருப்பாலைக்குடி பகுதிகளில் கேட்பாரின்றி கிடந்த இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு நிறுத்தி வைக்கபட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விசாரணையில், அவை பல மாதங்களாக அங்கு இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அதே போல் திருப்பாலைக்குடி அருகே வளமாவூா் பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது முனீஸ்வரன் கோயில் பகுதியில் சில நாள்களாக 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com