ராமநாதபுரத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு அன்னை புனித ஜெபமாலை தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் நகரில் சாலைத் தெருவில் உள்ள புனித ஜெபமாலை (ரோமன் சா்ச்) தேவாலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் தேவாலயத்தில் சிறப்பு வழிபாட்டுக்காக குவிந்தனா். அவா்கள் நள்ளிரவில் பங்குத்தந்தை ஆனந்த் தலைமையில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலையிலும் அனைத்து தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.