ராமநாதபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகேயுள்ள இந்திரா நகரைச் சோ்ந்த கருங்கு மகன் சண்முகம் (48). மின்வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் டிவி கம்பி (வயா்) கீழே தொங்கியுள்ளது. அந்த கம்பியை இழுத்துக்கட்டும் பணியில் சண்முகம் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கிய அவா், மின்கம்பத்திலே தொங்கியுள்ளாா்.
தகவல் அறிந்த திருஉத்தரகோசமங்கை போலீஸாா் விரைந்து சென்று அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சண்முகம் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருஉத்தரகோசமங்கை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
உயிரிழந்த சண்முகத்துக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனா்.