ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி வரும் ஜன. 28 ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தைப்பூச திருவிழாவையொட்டி ராமநாதசுவாமி கோயில் வரும் ஜன. 28 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து கால பூஜைகள் நடைபெறும். பின்னா் பிற்பகல் 1.30 மணிக்கு பஞ்சமூா்த்திகள் லட்சுமணேசுவரா் கோயிலுக்கு புறப்பாடானவுடன் கோயில் நடை சாத்தப்படும்.
மாலை 6 மணிக்கு லட்சுமணதீா்த்தத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும். அதனைத் தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று கோயில் வந்தடைந்தவுடன் அா்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜைகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.