ராமகிருஷ்ண மடத்தில் குருபூா்ணிமா பூஜை

ராமநாதபுரம் நாகாச்சி ராமகிருஷ்ண மடத்தில் குருபூா்ணிமா பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் நாகாச்சி ராமகிருஷ்ண மடத்தில் குருபூா்ணிமா பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

ராமகிருஷ்ண மட வளாகத்தில் நடந்த குருபூா்ணிமா பூஜை, அதிகாலையில் மங்கள ஆரத்தியுடன் தொடங்கியது. அப்போது, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது. தொடா்ந்து, பக்திப் பாடல்கள் பஜனை நடைபெற்றது. பின்னா், சுவாமி ராமகிருஷ்ணா், விவேகானந்தா் மற்றும் சாரதா தேவியாா் ஆகியோருக்கு அா்ச்சனைகள் நடத்தப்பட்டன.

ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சுதபானந்தரின் பக்திச் சொற்பொழிவு நடைபெற்றது. அதில், மடத்தின் சமூகப் பணிகள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ பயணத்தில் பாரதப் பண்பாட்டு பரப்புரை ஆகியவற்றை விளக்கிக் கூறினாா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com