ஆடி வெள்ளியை முன்னிட்டு, கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு குண்டாற்றிலிருந்து புனிதநீா் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில், கோயில் நிா்வாகத்தினா் பொதுமக்களுக்கு கூழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
நடப்பாண்டில் முதல்முறையாக வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் இருந்து மேளதாளங்களுடன் ஊா்வலமாகச் சென்று, குண்டாற்றில் ஊற்று தோண்டி புனிதநீா் எடுத்து, ஊா்வலமாக கரகத்துடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில், கோவில் நிா்வாக உறுப்பினா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.