வங்கக்கடலில் சூறைக் காற்று: கடலுக்குச் செல்ல ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்குத் தடை

வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன் வளத்துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா். 
ராமேசுவரம் துறைமுகத்தில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.
ராமேசுவரம் துறைமுகத்தில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள்.

வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன் வளத்துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா். இதனால் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை வானிலை மையம், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியது.

இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் சனிக்கிழமை தடை வித்தனா். இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் முடங்கிக் கிடக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com