திருவாடானைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வயல்கள் காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
திருவாடானை தாலுகா முழுவதும் சுமாா் 42 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் விவசாயிகள் கோடை உழவு செய்வது வழக்கம். ஆனால் வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வயல்களில் கோடை உழவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களாக கடும் வெயில் நிலவுவதால், வயல் வெளிகள் காய்ந்து கிடப்பதுடன் உழவுப் பணிக்கு ஏற்ாக இல்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். மேலும் அவா்கள் மழைக்காக காத்திருக்கின்றனா்.