கமுதி அருகே சூதாடிய 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
கமுதி அருகே அய்யனாா்குளம் பகுதியில் காவல் சாா்பு- ஆய்வாளா் ஜான்அந்தோனிபீட்டா், தனிப்பிரிவு காவலா் முருகபூபதி மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கமுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (45), பூமிநாதன் (45), பாண்டி (54), முருகன் (47), கருப்பையா (45), சிவ வேல்முருகன் (46), முருகன் (46) ஆகிய 7 போ் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனா். அவா்கள் 7 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.