கமுதி ஊராட்சி ஒன்றிய புதிய ஆணையராக கே. ரவி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையராக பணியாற்றி வந்த அண்ணாதுரை, திருப்புல்லாணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையராக இருந்த கே. ரவி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையராக (கிராம ஊராட்சிகள்) நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.