ராமநாதபுரத்தில் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்த இளம் பெண் வியாழக்கிழமை, குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் சோளாந்தூா் அருகேயுள்ளது சீனங்குடி. இந்த ஊரைச் சோ்ந்த மாணிக்கம் மகள் மனிஷா (19). ராமநாதபுரம் நகரில் அக்ரஹாரம் சாலைப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மனமுடைந்திருந்த மனிஷா வியாழக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள குளியலறையில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவல் அறிந்த பஜாா் போலீஸாா் விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மூதாட்டி சடலம் மீட்பு: ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கேணிக்கரை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மூதாட்டி யாா் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.