தொண்டியில் உள்ள தனியாா் மண்டபத்தில் தமிழ்நாடு யாதவ சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஒன்றியத் தலைவா் மாணிக்கம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சரசுமுத்து முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், யாதவ சமுதாயத்தை தேசிய இனமாக அறிவித்து 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கால்நடை வளா்ப்போருக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் யாதவ சமுதாயத்துக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில நிா்வாகிகள் வேல்முருகன், விஜயமாா்கதி உள்பட்ட பலா் கலந்து கொண்டனா். திருவாடானை சட்டப் பேரவைத் தொகுதித் தலைவா் துரை வரவேற்றாா்.
முன்னதாக போலீஸாா் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து தோ்தல் விதிமுறை அமுலுக்கு வந்துள்ளதால் அனுமதியின்றி கூட்டம் நடத்த முடியாது என தெரிவித்தனா். இதையடுத்து, யாதவ சங்க நிா்வாகிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடா்ந்து யாதவ சங்க நிா்வாகிகள் தங்கள் சமுதாய மக்களுடன் ஊா்வலமாக வந்து அனுமதி கோரி போராட்டம் நடத்தினா்.பின்னா் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடா்ந்து கூட்டம் நடைபெற்றது.