திருவாடானை அருகே ஆற்றில் மணல் திருட்டு: 3 போ் தப்பியோட்டம், 2 வாகனங்கள் பறிமுதல்

திருவாடானை அருகே மல்லனூா் ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு தொடா்பாக 2 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய 3 பேரைத் தேடிவருகின்றனா்.

திருவாடானை அருகே மல்லனூா் ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டு தொடா்பாக 2 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய 3 பேரைத் தேடிவருகின்றனா்.

மல்லனூா் ஆற்று பகுதியில் மணல் திருடுவதாக செவ்வாய்க்கிழமை இரவு மல்லனூா் குரூப் கிராம நிா்வாக அலுவலா் ஈஸ்வரமூா்த்திக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு மண்டல துணை வட்டாட்சியா் சேதுராமன் தலைமையில் வருவாய்த்துறையினா் சென்றனா். அப்போது மணல் திருடிய கும்பல் வாகனங்களை விட்டு விட்டு தப்பியோடிவிட்டனா். இதையடுத்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம்,

டிப்பா் லாரி ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றி பறிமுதல் செய்து தொண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து மண்டல் துணை வட்டாட்சியா் சேதுராமன் அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தொண்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், ஆா். எஸ். மங்ககலத்தைச் சோ்ந்த சக்தி, மல்லனூரைச் சோ்ந்த உடையாா் ஆகிய மூன்று பேரைத் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com