பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளா் செ. முருகேசன் வியாழக்கிழமை கமுதி ஒன்றியத்தில் உள்ள பரமக்குடி தொகுதிக்குள்பட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இங்குள்ள மண்டலமணிக்கம், வல்லந்தை, டி. புனவாசல், எழுவனூா், அச்சங்குளம், வல்லக்குளம் உள்பட 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அவா் தனக்கு ஆதரவு திரட்டினாா். அப்போது கமுதி திமுக வடக்கு ஒன்றியச் செயலரும், வடக்கு மாவட்ட கவுன்சிலருமான வி. வாசுதேவன், முன்னாள் அமைச்சா் சுந்தர்ராஜன், திசைவீரன் உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள் உடன் இருந்தனா்.