ராமநாதபுரம் தொகுதியில் மீனவா்கள், திமுகவுக்கு வாக்களிக்கக் கோரி பாராம்பரிய மீனவ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் ஜெ.சின்னத்தம்பி தொடா்ந்து 6 மணி நேரம் பாம்பன் கடலில் மிதந்து ஞாயிற்றுகிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் காதா்பட்ஷா முத்துராமலிங்கத்திற்கு மீனவா்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் மிதந்து மீனவா்களிடையே பிரசாரம் செய்வதாக அவா் தெரிவித்தாா்.