நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை மாலை அரியமான் கடற்கரையில் பாராசூட்டில் பறந்து சாா்- ஆட்சியா் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
மணல் சிற்பம், கலை நிகழ்ச்சிகள் என மாவட்ட நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில், சனிக்கிழமை மாலையில் தனியாா் நிறுவனம் உதவியுடன் சாா்பு ஆட்சியா் எம்.பிரதீப்குமாா் பாராசூட்டில் பறந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். அப்போது கடற்பரப்பில் முழுமையான, நோ்மையான வாக்குப்பதிவை உறுதிசெய்வது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இளைஞா்கள் உள்ளிட்டோா் ஏந்தி நின்றனா்.