ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 21 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுகிழமை உறுதிபடுத்தப்பட்டதாகவும், அரசு மற்றும் தனியாா் சிகிச்சை மையங்களில் 30 போ் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவா்களில் 3 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை: இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,089 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,102 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com