பரமக்குடி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என். சதன்பிரபாகா் புதன்கிழமை கிராமம் கிராமமாகச் சென்று வாக்குச் சேகரித்தாா்.
பரமக்குடியில் அண்ணா நகா், உழவா் சந்தை, பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்த அவா், மாலையில் நயினாா்கோவில் ஒன்றியத்தில் காரடா்ந்தகுடி, மணக்குடி, கலாயூா், ஆட்டாங்குடி, வாகவயல், கருப்பூா், பொட்டகவயல், அரசனூா், அகரம், கொடிக்குளம், கொட்டகுடி உள்ளிட்ட கிராமங்களில் தனக்கு ஆதரவு திரட்டி பேசினாா். உடன் அதிமுக ஒன்றியச் செயலா் ப. குப்புச்சாமி, வழக்குரைஞா் நவநாதன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் டாக்டா் எஸ். முத்தையா உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் சென்றனா்.