தொண்டி பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு வியாழக்கிழமை திருவாடானை வட்டாட்சியா் அபாராதம் விதித்தாா்.
தொண்டி பகுதியில் தினசரி காய்கறி சந்தை, மீன் சந்தை பகுதிகளில் கரோனா பொதுமுடக்க விதி முறைகளின்படி சமூக இடைவெளியில்லாமல் கூட்டமாகவும் முகக்கவசம் அணியாமாலும் வியாழக்கிழமை வியாபாரம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து வட்டாட்சியா் செந்தில் வேல் முருகன், தொண்டி பேரூராட்சி செயலா் மகாலிங்கம் மற்றும் காவல், வருவாய்த்துறையினா் சென்று தேநீா் கடைகளில் உள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனா். மீன் சந்தை மற்றும் காய்கறி கடைகளுக்கு தலா ரூ.500 அபாரதம் விதித்தனா். மேலும் கரோனா பற்றிய விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.